நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ஈகையின் சுடருக்கு ஈன்ற தமிழ் வணக்கம்..!!

வியாழன் கவி 2210!!

ஈகையின் சுடருக்கு
ஈன்ற தமிழ் வணக்கம்..!!

தியாகத்தின் வழி நினதே
திண்மமாய் நின்ற மெழுகே
நீ திரவமாய் கரைந்தனையோ
நல்லூரான் வீதியிலே
இரு ஆறு நாட்கள் கிடக்கையில்
உணவும் நீரும் விடுத்து
ஈழ விடுதலை வேண்டி
உருகினையோ பார்த்தீபா..

பாதகர் தம் நிலையறிந்து
பற்றினையும் நீ துறந்து
ஐந்தாய்க் கோரிக்கைகள்
அடுக்கியே படுக்கையில்
பார்த்திருந்த விழிகள் செந்நீர்
சிந்தியதை மறப்போமோ
சுதந்திர தமிழீழம் வேண்டு
சுகமதனை இழந்தவனே
உன் தியாகம் மறந்திட
நாம் மாக்கள் இல்லையே..!!
சிவதர்சனி இராகவன்
18/9/2025

Nada Mohan
Author: Nada Mohan