கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

“உயிரக்குமா சுவடுகள்”?

நேவிஸ் பிலிப் கவி இல(484)

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவனை மறைக்க முடியுமா?
ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டாலும்
உண்மைகள் உறங்கிடுமா?

புறக்கணிப்பின் பக்கங்களாய்
மறைக்கப் பட்ட உண்மைகள்
அநீதியின் வடிகாலாய் கோரமாய்
கொன்று புதைக்கப்பட்டோரின்
எச்சங்கள் மிச்சங்களாய்

செம்மணிமண்ணின்
அகழாராய்வில் கண்ட சுவடுகள்
நீதியின் உயிர்ப்புக்கு
நல்லதோர் சான்றாய்
சர்வ தேசங்களின் பார்வை

நீதி உண்மை உறங்கிட்ட போதும்
அசையாத திடத்தோடு
வலிகள் கோடி சுமந்த
உறவுகளின் போராட்டத்துக்கு
கிடைக்கப் போகும் தீர்ப்பு

உயிர்க்குமா ?என்ற கேள்விக்குப் பதிலாய்
கிடைத்த சுவடுகளே ஆதாரமாய்
நீதி நிலைக்கட்டும்
நியாயம் நல்ல தீர்ப்பை வழங்கட்டும்
நன்றி……..

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading