உயிரான உறவு

செல்வி நித்தியானந்தன்
உயிரான உறவு

உயிருக்குள் கருவாகி
உதிரத்துள் சுமையாகி
உவகையில் இணைவாகி
உள்ளமதில் கொள்ளை
கொண்ட தாய்அவரே
உலகைவிட்டு ஆறு
ஆண்டு கடந்ததே
உம்நினைவு எம்மை
விட்டு அகலாதே

உயிரான உறவுகள்
உதிரப் பிணைப்புகள்
உரிமை உணர்வுகள்
உசிரை எடுக்கினம்

உயிரான உறவுதனை
பயிரான நினைவுகளை
காதல் நினைவுடனே
காக்கும் எம்உயிரே
கருவான உறவுடனே
கண்ணின் மணிபோல
காலமெல்லாம் காக்கும்
காத்திடும் உறவுகளின்
நினைவுடனே நானும்

செல்வி நித்தியானந்தன்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading