உயிரான உறவு

செல்வி நித்தியானந்தன்
உயிரான உறவு

உயிருக்குள் கருவாகி
உதிரத்துள் சுமையாகி
உவகையில் இணைவாகி
உள்ளமதில் கொள்ளை
கொண்ட தாய்அவரே
உலகைவிட்டு ஆறு
ஆண்டு கடந்ததே
உம்நினைவு எம்மை
விட்டு அகலாதே

உயிரான உறவுகள்
உதிரப் பிணைப்புகள்
உரிமை உணர்வுகள்
உசிரை எடுக்கினம்

உயிரான உறவுதனை
பயிரான நினைவுகளை
காதல் நினைவுடனே
காக்கும் எம்உயிரே
கருவான உறவுடனே
கண்ணின் மணிபோல
காலமெல்லாம் காக்கும்
காத்திடும் உறவுகளின்
நினைவுடனே நானும்

செல்வி நித்தியானந்தன்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading