“உயிரான உறவே”

நேவிஸ் பிலிப் இல்(563)

உயிரான உறவாக
இறை என்பேனா
மறை என்பேனா
அன்னை என்பேனா
தந்தை என்பேனா
தாயுமானவன் என்பேனா

பத்து மாதம் சுமந்து பெற்று
குருதியை பாலாயூட்டி
அன்பாய் வளர்த்தெடுத்த
என் அம்மா

தோளிலே எனை சுமந்து
மனதிலே நேசம் வைத்த அப்பா
கண்டிப்பும் காட்டிடுவார்
விகடமாய் பேசிடுவார்

வாழ்வின் வரமாய் வந்தார்
கையோடு கையிணைத்தோம்
அன்பிற்கும் பஞ்சமில்ல
ஆசைக்கும் குறைவேயில்லை

உயிரான உறவுகளாய்
கூடியே வாழ்கின்றோம்
வம்சங்கள் தளைத்திடவே
பந்தங்கள் பெருகிடவே
இறை துணை கூடிடுமே
வரமே வேண்டிடுவோம்
நன்றி

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading