கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்….

வசந்தா ஜெகதீசன்
காலச்சக்கரப் பிடிக்குள்ளே
கணதி நிறைந்த வலிக்குள்ளே
தமிழரினமே புதைந்தது தலைவிதி இதுவென நொந்தது
காணாமல் போனோர் கதறல் ஒலி
கவலையில் கருகிடும் மனிதவலி
புதைகுழித் தோண்டலில் உடலங்கள்
உருக்குலைந்த காட்சிப் படிமங்கள்
வெந்து துடிக்குது சிந்தையே
வேதனை வெடிக்குது விம்மியே
அன்றைய பொழுதின் அவலப்பிடி
அனுதினம் வதைபட்ட ரணத்தின் வலி
பாலகர் முதலாய் பற்பல உறவாய்
தேடலில் அலைந்தோம் தினம் தினம் வெந்தோம்
புதைகுழி சாட்சியம் கொல்லுது மனசை
பள்ளிப்பையுடன் பாலகர் புதைப்பு
காட்சியாய் சாட்சியாய் கணதியில் இதயம்
காணாமல் போனோர் உயிரின் சுவாசம்
உயிர்க்குமா சுவடுகள் உண்மைக்கு உறுதியாய்!நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading