உயிர்க்குமா சுவடுகள்-2051 ஜெயா நடேசன்

உள் நாட்டு கடும் போரினால்
உயிர் காக்க அகதி முகாம்களில்
கம்பி வலைக்குள் அடைப்பில்
வெள்ளை வானில் கடத்தலில்
குழி தோண்டி உடல்கள் புதைப்பில்
செம்மணி புதை குழிகள் பலதில்
மனித எலும்புக் கூடுகள் எச்சங்கள்
உயிரோடு புதைத்த உடல்களில்
இளையோர் பள்ளிப்பை காலணி
ஆண் பெண் இளையோர் உடல்கள்
தோண்டத் தோண்ட முழுமையான
மனித எலும்புகள் அடையாளமாக
செம்மணி குற்றம் நிறைந்த பிரதேசமாக
முத்திரை பதித்ததில் ஆதாரமா

நீதி தேவதையில் உயிர்க்குமா சுவடுகள்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading