உயிர்க்குமா சுவடுகள்

ஜெயம் தங்கராஜா

அரச பயங்கரவாதம் செய்ததே அரக்கத்தனம்
சரணடைந்தோரையும் கொன்று புதைத்த மிருகத்தனம்
காணாமல் ஆக்கப்பட்டோர் வருவார்களேயென்ற கனவுகள்
வீணாகிப்போனதால் சுக்குநூறாகியதே உறவுகளின் மனங்கள்

நீண்டுசெல்கின்றது மனிதப் புதைகுழிகளால் தாயகம்
மீண்டுமொருகுழி செம்மணியில் பதைபதைக்கின்றது நெஞ்சகம்
தாயோடு சேயையும் சேர்த்தே சிதைத்து
நேயமேயில்லாமல் பிடிபட்டவரை கொன்று புதைத்து

பாரிய மனித புதைக்குழிகள் ஆயிரக்கணக்கில்
பாரில் இதைக்கண்டும் காணாத போக்கில்
மனித உரிமை ஆணையமே விடைகொடு
இனியேனும் அதிகாரத்தின் கொடூரங்களைத் தடு

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading