இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்

ஜெயம் தங்கராஜா

அரச பயங்கரவாதம் செய்ததே அரக்கத்தனம்
சரணடைந்தோரையும் கொன்று புதைத்த மிருகத்தனம்
காணாமல் ஆக்கப்பட்டோர் வருவார்களேயென்ற கனவுகள்
வீணாகிப்போனதால் சுக்குநூறாகியதே உறவுகளின் மனங்கள்

நீண்டுசெல்கின்றது மனிதப் புதைகுழிகளால் தாயகம்
மீண்டுமொருகுழி செம்மணியில் பதைபதைக்கின்றது நெஞ்சகம்
தாயோடு சேயையும் சேர்த்தே சிதைத்து
நேயமேயில்லாமல் பிடிபட்டவரை கொன்று புதைத்து

பாரிய மனித புதைக்குழிகள் ஆயிரக்கணக்கில்
பாரில் இதைக்கண்டும் காணாத போக்கில்
மனித உரிமை ஆணையமே விடைகொடு
இனியேனும் அதிகாரத்தின் கொடூரங்களைத் தடு

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading