நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்

ஜெயம் தங்கராஜா

அரச பயங்கரவாதம் செய்ததே அரக்கத்தனம்
சரணடைந்தோரையும் கொன்று புதைத்த மிருகத்தனம்
காணாமல் ஆக்கப்பட்டோர் வருவார்களேயென்ற கனவுகள்
வீணாகிப்போனதால் சுக்குநூறாகியதே உறவுகளின் மனங்கள்

நீண்டுசெல்கின்றது மனிதப் புதைகுழிகளால் தாயகம்
மீண்டுமொருகுழி செம்மணியில் பதைபதைக்கின்றது நெஞ்சகம்
தாயோடு சேயையும் சேர்த்தே சிதைத்து
நேயமேயில்லாமல் பிடிபட்டவரை கொன்று புதைத்து

பாரிய மனித புதைக்குழிகள் ஆயிரக்கணக்கில்
பாரில் இதைக்கண்டும் காணாத போக்கில்
மனித உரிமை ஆணையமே விடைகொடு
இனியேனும் அதிகாரத்தின் கொடூரங்களைத் தடு

Nada Mohan
Author: Nada Mohan