” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் கொண்டாடும் தினம்
உழைக்கும் மனித இனம்
உழைக்கும் கரங்கள் உயரும்
பிழைக்கும் வழிகள் புரியும்
வேலை தேடும் பட்டதாரிகள்
காலையில் வெளிக்கிட்டு தேடுகிறார்
உத்தியோகம் பார்ப்பதே கொள்கை
உத்தியை கையாள தெரியாத கிள்ளை
பட்டம் பெற்றவரும் செய்கிறார் விவசாயம்
படிக்காதவரும் செய்கிறார் விவசாயம்
விவசாயம் நன்றாக விளைந்தால்
விற்பன்னர் ஆகிடலம் வாழ்வில்
அன்றாடம் காய்ச்சிகள் ஏழைகள்
அன்று உணவிற்கே வழியில
லையெனில்
என்ன செய்வார் பசிக்கு
உழைப்பாளர் தினத்திலே
உரியமுறையில் நல்விளைவுகள்
இருந்தால்
மக்கள் மனதில் மகிழ்ச்சி
பொங்கிடுமே வாழ்வில்
உழைப்பாளிகளைப் போற்றுவோம்
உழைத்தே நாம் வாழ்ந்திடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan