நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

உழைப்பின் மாண்பு

நேவிஸ் பிலிப் கவி இல (432)

வைகறை விடியலும்
வையத்தில் கரை புரளும் உற்சாகமும்
கடலலை போல் பொங்கிடும்
இந்நாள்

உழைப்பின் பெருமையை
உருவாக்கும் கரங்களை
போற்றிப் பெருமைப் படுத்தும்
உழைப்பாளர் தினம்

உடலுக்கு உற்சாகம் உழைப்பு
அதுவே மனித மாண்பின் சிறப்பு
எத்தொழில் ஆற்றிடினும்
அத் தொழிலே தெய்வமென
போற்றிப் புகழ்ந்திடுவோம்

செய்யும் பணியில் பணிவும்
பகிர்ந்து வாழும் பண்பும் வேண்டும்
அடிமைத் தனங்கள்அடக்கு முறைகள் ஒழிய
நொறுங்குண்ட மனங்கள் மகிழ வேண்டும்

உழைப்பைக் கைவிடாதே
தோல்வி கண்டு துவண்டிடாதே
ஓடும்வரை ஓடிக் கொண்டே இரு
முயன்றால் தொடு வானம் கூட
தொட்டு விடும் தூரமே

நன்றி வணக்கம் .

Nada Mohan
Author: Nada Mohan