” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எண்ணம்191-கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

எண்ணம்

எறும்புபோல் சுறுசுறுப்பு எமக்குள் இருந்தால்
உறுப்புகள் இயங்கும் உற்சாகம் பிறக்கும்
விறுவிறுப்பாய் எண்ணம் விரைந்து செயற்படும்
சுறுசுறுப்பு தன்னால சோர்வை அகற்றும்

எண்ணம் சிறகடிக்கும் இயலாமை தோற்கடிக்கும்
வண்ணத்துப் பூச்சியைப்போல் வட்டமிடும் சிந்தனைகள்
விண்ணைத் தொடும் விந்தைகள் வேகமாய்
வண்ணமாக உள்ளத்தில் வடிவமைக்கும் காட்சிகள்

இயலாமை என்ற எண்ணம் முயலாமை
சுயமாய் சிந்தித்து சோம்பலின்றி வாழ்வோமே….

Nada Mohan
Author: Nada Mohan