” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எல்லாளன்

தமிழரின் நாடென்ற பெருமை
தாங்கிய தமிழக அரசின் பெருமை
எழில் மிகு கலாசார தொன்மை
எதையும் காப்பதில் வீறான வலிமை
மொழி வளம் பண்பாடு பக்தி
மூலத்தை பேண அதி ஆர்வம் முற்றி
அழகாக மனைதோறும் கோலம்
அதிகாலை மாலை அழகாக ஜாலம்

பதினாறு நூற்றாண்டின் முன்பு
பண்டய மன்னர் படைப்பாக நின்று
அதிசய கலைச் சிற்ப கோயில்
அறுபத்து மூன்று நாயனார் பாடல்
விதிமுறை தவறாது கட்டி
வீரிய கருங்கல்லில் வானையே முட்டி
திசையாவும் கோபுரம் சிற்பம்
திடமாக அழிவிலும் சிதறாது நிற்கும்.

மத சார்பு இல்லாத மாண்பு
மக்கள் வாழ் தரதை உயர்திட வீம்பு
பல நாடும் முதலிட நாட்டம்
பலமான தமிழகம் எழுப்பிட நோக்கம்
அயராத முதல்வரின் ஓட்டம்
ஆயிரம்யானை பலத்தினை காட்டும்
தமிழர் எம் அடையாள பூமி
தகராமல் காத்திடு தலைவனே
ஸ்ராலின்.

Nada Mohan
Author: Nada Mohan