“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 204 “நீதியே நீ எங்கே? -எல்லாளன்- வழிமேலே விழிவைத்து வருமானம் குறியாய்
வஞ்சனையும் ஏமாற்றும் வாழ்வில் தம் நெறியாய்
பழிபாவம் இறைநீதிக் அஞ்சாத நெஞ்சம்
பாதம்படும் இடங்கலெங்கும் கெடுதி சூது வஞ்சம்
**
ஈவு இரக்கம் பொதுநீதி இறைபயமே இல்லார்
எதில் எங்கும் என்நாட்டும் முன்னணியில் உள்ளார்
காவிவரும் ஊடகங்கள் இவர் ஊழல்
கதைகள்
காலத்தால் அவை மறைய மீள மன்றில் இவர்கள்
**
தர்ம பொது ஸ்தாபனத்தை தாம் தொடக்கி இயக்கி
தமக்கென்று சம்பளமாய் உறவு பேரில் வறுகி
அபிவிருத்தி திட்டமென அறிக்கை காட்டி கறந்து
அதில் சிறிதை செலவு செய்ய கெளரவங்கள் விருது
**
சட்டத்தை ஏமாற்றி பணம் தொகையாய் கறந்து
தன் பெயரில் பொது சொத்தை மாற்றி தான் மடக்கி
விட்டெறியும் சில்லறைக்காய் சிலர் பந்தம் பிடிக்க
வீடு வரும் கறுப்பு பணம் வட்டிதரும்
சிறக்க
**முன் ஒன்றும் முதுகின் பின் இன்னொன்றும் பேசும்
முகமுடைய இவர் பையில்தான் சென்றடையும் காசும்
நின்றறுக்கும் தெய்வம் என்ற நீதி நெறி பொய்யா?
நீசருக்கே கெளரவங்கள் பணம் பதவி உய்வா?

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading