ஏமாளியாகாதே 68

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-08-2025

ஏமாளியாகாதே தோழி
எதையும் தள்ளி வைக்காதே
தேனாய்ப் பேசி பலர்
தெருவிற்கு இழுத்து விடுவினம்

கண்டதையும் நம்பாதே
கண்மூடித்தனமாய் வாழாதே
அறிவுபூர்வமாய் ஆராய்ந்திடு
ஏமாற்றம் உன்னை அணுகாது

திண்ணிய நெஞ்சமும்
தெளிந்த நல்லறிவும் கொள்
தினமும் இறைவனை பிரார்த்தி
தீங்கு நினைக்காதே பிறர்க்கு

உழைப்பை உயர்வாய் நம்பிடு
ஊருக்குள் கொஞ்சம் உதவிடு
வலிமை கொண்டவள் நீ
வாழ்ந்திடு.. ஏமாளியாகாதே!

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading