” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஒத்திகை

ஜெயம் தங்கராஜா

முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை கை
எத்தனைமுறை நிகழ்த்தினாலும் சரிபார்க்கும் பயிற்சி
ஒத்திகை உதவாதே தள்ளிப்போவதுண்டு முயற்சி

நல்லாத்தான் இருக்கும் தனித்தே செய்திடும்போது
எல்லோருக்கும் மத்தியிலே நல்லாகப் படுத்திடும்பாடு
தேர்வினிலும் இதுபோன்று அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு
நேர்முகமென வரும்போது வெடிக்காது குண்டு

அதை மாதிரி செய்து பார்ப்பது
அதையே மீண்டும் செய்வதற்கு வேர்ப்பது
பலர் மேம்படுத்திகொள்வார் தங்களை இதனூடு
சிலர் என்போன்று நல்முறையின்றி பெரும்பாடு

ஜெயம்
12.06.2024

Nada Mohan
Author: Nada Mohan