முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

ஒளியிலே தெரிவது…

ரஜனி அன்ரன்

ஒளியிலே தெரிவது……..கவி…ரஜனி அன்ரன் (B.A) 14.11.2024

கார்மேகம் மழை பொழிய
கார்முகிலும் குடை பிடிக்க
காந்தள்களும் முகையவிழ்க்க
கார்த்திகைத் தீபங்களும் சுடர்விட்டெரிய
கண்ணுக்குள் விடியலைக்
கனவாகச் சுமந்து சென்ற
கார்த்திகை மைந்தர்களின் ஒளிமுகமும்
கார்கால ஒளியினிலே மின்னித் தெறிக்குமே !

மாவீரர் காலம் மழை பொழியும் காலம்
பொழியும் மழைத்துளியும் உம் முகம் நனைத்திட
பூமித்தாயும் சில்லென்று சிலிர்த்திட
பூங்காற்றும் வந்து மெல்லத் தழுவிட
பூத்திடும் காந்தளும் பொன்மேனியை அணைத்திட
கார்த்திகைத் தீபமும் சுவாலை விட்டெரிய
தீபத்தின் ஒளியினிலே தெரிவது உம் திருமுகமே !

சத்திய வேள்வியில் ஆகுதியாகி
நித்தியமான உத்தம சீலர்களே
நீவிர் அத்தனை பேரும்
கார்த்திகை மலர்வில் தீபத்தின் ஒளிர்வில்
ஒளிரும் உன்னத சுடர்மணிகளே
எம் கண்ணீர்த் துளிகளும் காணிக்கையாகிட
தீபஒளியினில் தெரிவது உம் திருமுகமே !

Nada Mohan
Author: Nada Mohan