திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஔவை

பருவ மாற்றம்
=============
பருவங்கள் என்பது
பலதிலும் மாறும்
உருவமும் மாறும்
உண்மையும் அழியும்
கருமேக வாழ்வு
கனகாலம் உண்டோ?
கருவின் பருவம்
கணக்கில் அடங்குமோ?

பூமியில் பருவத்தைப்
புரிந்திட வைத்துச்
சாமியாய்த் தெரியும்
சந்திரன் வாழ்வில்
தேய்கின்ற நிலையும்
தெரிந்த ஒன்றே
மாய்கின்ற உலகினை
மாற்றுதே பருவங்கள்

மாரியில் மகிழும்
மண்ணின் மனதை
வாரிச் செல்லும்
வெய்யிலின் வேகம்
ஏரியில் வாழும்
உயிர்கள் வாழ்வில்
பூரிக்கும் காலம்
பலநாள் இல்லை

உயிருக்கு மட்டுமா
உருவங்கள் மாறும்?
பயிருக்கும் மாறும்
பண்பிற்கும் மாறும்
வெயிலுக்குக் கூட
வெவ்வேறு இயல்பு
தயிராகின் பாலின்
தன்மையே வேறு

பனியோ மழையோ
பளிச்சிடும் வெயிலோ
கனியோ மலரோ
கடலோ வானோ
மனிதனோ மரமோ
மண்ணோ மழையோ
தனியாக ஒவ்வொன்றின்
தன்மையும் மாறும்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading