” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஔவை

விடியும் தேசம்.
————————–
நீலமும் பச்சையும்
நித்தம் பார்த்து
காலமும் போச்சு
கனவுகளும் போச்சு
கோலங்கள் போட்ட
கோமாளிகள் ஆட்சியில்
ஏலத்தில் நாடு
ஏமாந்து போச்சு

சிந்தனை புதிதாய்
செயல்கள் சிறப்பாய்
வந்தது சிவப்பு
வரவேற்போம் துணிந்து
சந்ததி புதிது
சாதிக்க நினைக்கும்
நிந்தனை வேண்டாம்
நிசமாக ஏற்போம்

வளமான நாட்டை
வரமாக ஆக்க
இளமையின் துடிப்பில்
எமக்கோர் தலைவன்
களவுகள் இல்லை
கடமையும் நன்றே
உளமார நோக்கம்
உள்ளத்தில் வேகம்

குடிசையில் பிறந்து
கோபுரமாய் உயர்ந்தாய்
அடிமை உடைப்பாய்
அனைத்தையும் இணைப்பாய்
முடியும் உன்னால்
முயல்வாய் நன்றே
விடியும் தேசம்
வெற்றியை நோக்கி…

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan