கண்ணீர்..(4)

கண்ணீர்….விண்ணவன் – குமுழமுனை..
*~***~”**
வலிகளை மறைத்திடவோ முகத்தினிலே
சிரிப்பை அணிந்தேனே;

ஆனாலோ கண்களின்
கண்ணீரோ – சில
சமயம் அவற்றை வெளிக்காட்டிவிடும்
விந்தைதான் என்னவோ??

சில நேரங்கள் தனிலே
உதட்டில் சிரிப்பு
கண்களில் நீரோ வழிந்தோடும்!!

மழை நீரை இரசிக்கும்
மக்களோ
அதை இரசிக்கும் வேளை;

என் மனதில் என்னவோ
வானம் தன் சோகங்களை
நினைத்து வடிக்கும்
கண்ணீர் தான் என்னவோ மழையாய் பொழிகிறது என்று;

என்ன விந்தை பாருங்கள்
வானமோ தன் வேதனை நினைத்து
வடிக்கும் கண்ணீர்
தனையே நாம் மழையாக கொண்டாடுகிறோம்;

இவ்வாறு தான்
சிலர் கண்ணீரும்
சுற்றத்தின் கொண்டாட்டத்திற்காய்
பொழிகின்றது….
*~***~*
விண்ணவன் – குமுழமுனை…

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading