” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலாஜெயபாலன்

மாசி
மாசிமாதம்
மாசி மகிழ்வு தரும்
அண்ணா வருவார் கொழும்பால
சிவராத்திரிக்கு சிவன் கோயில் போக
அவர் போக இல்லை
எங்கள் நால்வரையும் அழைத்துச் செல்ல
இரவிரவாய் நித்திரை விழிப்பு
நண்பிகளுன் நல்ல கொண்டாட்டம்
தீர்த்தக் குளமுடன் தித்திக்கும் உணவு
சைவ உணவு தரும் நற்சுவை
அம்மாவுக்கும் அதிலொரு உருண்டை
அக்கா எடுத்து பையில்வைப்பார்
நல்லதங்காள் காத்தவராயன் கூத்து
இப்படியான பொழுது போக்குகள்
இளம் காதல் சோடிகள் இங்கு
காணாமல் போவதும் உண்டு
எத்தனை இன்பங்கள் எம்நாட்டில் உண்டு
இவை எல்லாம் இனியெப்போ வரும்
இதில் ஒரு விசேடம் அண்ணா கேட்பார்
மலர் இன்று எத்தனை ஏக்கர்
உழுதாய்? வாலிப்ப் பருவம்!
வாய் பேசக்கூடாது/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan