” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

கவி அழகு
அழகு அழகு கவியழகு
அமிர்தம் சிந்தும் மதியழகு
உள்ளம் நினைக்கும் வடிவமது
உன்னதமான உலகமது

வண்ணம் சிந்தும் வர்த்தைகளால்
வரைந்து வடிக்கும் ஓவியமே
கண்ணில் தோன்றும் கவர்ச்சிதனை
கயல்மீன் என்றே கவசொல்லும்

மண்ணில் தோன்றும் மகிமையுமே
மனதில் தோன்றும் மகிழ்வாக
எண்ணில் கவிதை வரிகளெல்லாம
இயற்கை அழகோ அழகன்றோ
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan