” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

குழலோசை
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
ஓசைகள் பலவிதம் ஒலிக்கும் விதம்விதம்
பாசைகள் வேறெனினும் பரவிடும் ஓசைநயம்
ஏழு சுரங்களுக்குள் எல்லாம் அடக்கம்
வழும் மனிதருக்கு வரமாய் கிடைக்கும்

இசையால் மயங்காத இதயமெது சினிமாவரி
அசையாத மனமும் அசையும் குழலோசையால்
மடங்காத பாம்பும் மடங்கும் மகுடியால்
அடங்காத மனிதனும் அடங்குவான் இசையாலே

காற்றலையில் சேர்ந்து கதைகள் பேசும்
நாற்றிசையும் அதனுள்ளே நர்த்தனம் ஆடும்
மூங்கலின் மகத்துவம் முன்னோர் படைப்பு
தாங்கிடும் உலகம் தாகமும் தீராது

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan