” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

அண்ணா
——————
பண்பினில் சிறந்து பலரைக் காத்தாய்
படிப்பினில் உயர்ந்து பலதும் கற்றாய்
பற்றுடன் இங்கே பறந்து வாராய்

கண்ணிலே மணியாய்க் காத்த தெய்வம்
கருணையும் கொண்ட கலங்கா உள்ளம்
குணமுடன் கூடிய குன்றே வாராய்

மண்ணிலே குருவாய் மகிழ்ந்து வாழ்ந்தும்
மனிதமும் கொண்ட மானிடக் குன்று
மனந்தனில் என்றும் மறவோம் வாராய்

கண்ணியம் கொண்டே கடமை செய்தாய்
காரியமும் முடித்துக் கலந்தாய் காற்றாய்க்
காலமும் மாறும் கண்ணே வாராய்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan