மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கமலா ஜெயபாலன்

என்னுயிர்க் கண்ணம்மா
—/////—-//:/:::::::-/::-//:::
என்னை அன்னையாய் இவ்வுலகில் நடமாட
தன்னைத் தந்த தங்கமே என்னுயிரே
முன்னை எனைவிட்டு புணுபுணுத்து
பின்னைப் புறம்சொன்ன பித்தரை
வன்மம் போக்க வந்து உதித்து
அன்னை ஆக்கிய ஆருயிர் கண்ணம்மா
உன்னை நினைத்தால் உயிரே உருகுதடி
மன்றி்ல் என்னை மனிதனாக்கிய மரகதமே
குன்றாக் குலக் கொடியே கண்ணம்மா
நன்றி நான்சொல்வேன் நாயகியே உந்தனுக்கு
சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா/

வண்ணத்துப் பூச்சியாய் வளர்ந்து சிறகடிக்க
எண்ணத்தல் உன்நினைவு இதமாய் இனிக்குதடி
பண்ணோடு பாட்டிசையும் பரதமும் பக்குவமும்
எண்ணத்தில் இனிக்குதடி என்மகளே கண்ணே/

முல்லை மலரே முத்தே மரகதமே
மல்லிகையாய் மணம் வீசும் மானே
எல்லை இல்லா இன்பத்தை எமகளிந்து
கல்லையும் கரைக்கும் கனிவான பார்வையினால்/

உள்ளம் உருகுதடி உத்தமியே என்னுயுரே
கள்ளம் இல்லா காரிகையே கண்ணே
என்னகத்தே என்றும் எழிலாய் வீற்றிருக்கும்
என்னுயுர்க் கண்ணம்மா என்னுயர் நீயன்றோ

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading