கமலா ஜெயபாலன்

மழைநீர்
கானமயில் ஆட கார்மேகம் ஓட
மாமயிலும் மழைகண்டு மதுரமாய் ஆட
தானாக மழைபொழிய தரையெங்கும் தண்ணீராய்
தருகின்ற குளிர்மையிலே தரணியும் மகழ்கிறதே!

வான்பார்த்து வயலுழும் விவசாயி ஏர்பூட்டி
கான்வெட்டி வரம்புகட்டி காட்டையும் களனியாக்கி
பார்ருண்ணப் படைத்திடுவான் பார்புகழ வாழ்ந்திடுவான்
மார்தட்டி மகிழ்திடுவான் மங்களமாய் வாழ்ந்திடுவான்!

குளமதனில் நீர்தேக்கி குறையாமல் போகமிரண்டு
தளராமல் விதைத்திடுவான் தாங்கிடுவான் சமூகத்தை
காய்கறியும் பயிரிட்டு காத்திடுவான் மழைநீரால்
தாயாக எம்நிலமும் தந்திடுமே வாழ்வதனை!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading