நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கமலா ஜெயபாலன்

பொங்கலோ பொங்கல்
வானம் கறுத்தது வான்மழை பொழிந்தது
தானம் சிறக்கவே தந்தாள் நிலமாதா
பொன்னும் மணியுமென பொலிந்தது சிறந்தே
நன்றென ஆதவனும் நவின்றான் ஒளிதனை

மனமும் மகிழ மாதம் மும்மாரி
தினமும் வாழ்வு தித்திப்பாய் இனிக்க
குடும்பம் சிறக்க குவலயம் மகிழ
படும் துன்பம் பறந்து போகும்

தைபிறந்தால் வழிபிறக்கும் தரணியெங்கும் ஒளிமிளிரும்
கைநிறையப் பணமும் கவலையெல்லாம் மறந்துபோகும்
உறவுகள் கூடும் ஒன்றாய் ருசிக்கும்
சிறுவர்கள் கூடி சிட்டாய்ச் விளையாடுவர்

கரும்பும் இஞ்சியும் கற்கண்டும் தேனும்
விரும்பி உண்ண விருப்புடன் பொங்கி
பாலும் பொங்க பொங்கலோ பொங்கல்
என்னு எழுப்பும் குரல்கள் இனிமையே

Nada Mohan
Author: Nada Mohan