பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கமலா ஜெயபாலன்

பொங்கலோ பொங்கல்
வானம் கறுத்தது வான்மழை பொழிந்தது
தானம் சிறக்கவே தந்தாள் நிலமாதா
பொன்னும் மணியுமென பொலிந்தது சிறந்தே
நன்றென ஆதவனும் நவின்றான் ஒளிதனை

மனமும் மகிழ மாதம் மும்மாரி
தினமும் வாழ்வு தித்திப்பாய் இனிக்க
குடும்பம் சிறக்க குவலயம் மகிழ
படும் துன்பம் பறந்து போகும்

தைபிறந்தால் வழிபிறக்கும் தரணியெங்கும் ஒளிமிளிரும்
கைநிறையப் பணமும் கவலையெல்லாம் மறந்துபோகும்
உறவுகள் கூடும் ஒன்றாய் ருசிக்கும்
சிறுவர்கள் கூடி சிட்டாய்ச் விளையாடுவர்

கரும்பும் இஞ்சியும் கற்கண்டும் தேனும்
விரும்பி உண்ண விருப்புடன் பொங்கி
பாலும் பொங்க பொங்கலோ பொங்கல்
என்னு எழுப்பும் குரல்கள் இனிமையே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading