” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

பிள்ளைக் கனியமுதே

சின்னம் சிறுமலரே சிங்காரப் பொன்ரதமே
கன்னக் குழியுடனே கண்சிமிட்டும் கற்கண்டே
அள்ளி அணைத்திடவே ஆயிரம்கை வேண்டுமடி
துள்ளி நடக்கையிலே துணவு தெரியுதடி

கலகலக்கும் உன்சிரிப்பு கள்ளமிலா வெள்ளைமனம்
குலங் காக்கும் குண்டுமணிக் குன்றே
காலில் சதங்கை கட்டி கண்மணிநீ
பாலில் வெண்ணெய்யாய் கலந்து சுழன்றிடுவாய்

பிள்ளை கனியமுதே பேசும் சித்திரமே
கள்ளமிலா கலைமகளே கண்ணின் மணியே
அன்னம் பிசைந்தால் அமுதும் அதுவன்றோ
உன்மொழி இனிமையிலே மயங்காதார்
யாரெவரோ/
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan