நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கமலா ஜெயபாலன்

அத்திவாரம்
அத்திவாரம் போட்டு அழகாக வீடுகட்டி
அன்டை அயலவருடன் அமர்ந்திருந்த காலமெங்கே
அன்ன நடைநடந்து அழகான என்னம்மா
ஆடிவந்த அற்புதமான அந்த நாளெங்கே
அக்காக்களும் அண்ணையும் ஒன்றாக அமர்ந்து
அரட்டை யடிக்கும் அந்த வாங்கில்
ஆரு கொண்டு போணாணோ அறியவில்லை
உப்புச் சிரட்டையும் உண்மையில மிஞ்சவில்ல்லை
உள்ளே வெறுஞ்சுவரும் ஓடித்திரியும் ஓனானுந்தான்
அடிக்கல் நாட்டிய அந்நாள் என்மனதில்
ஆயிரம் எண்ணங்கள் அலையாய் மோதி
ஓடி விளையாட ஒருசேனை பிள்ளைகளும்
ஓராயிரமாண்டு ஒண்றாய் வாழ்வோம் என
மனக்கோட்டை கட்டி மகிழ்ந்திருந்த காலமதில்
மண்கோட்டை ஆகியது மனமுடைந்துபோனதுவே
இட்ட அத்திவாரம் இன்னும் இருக்கிறது
இருந்ந மக்கள் மாடு ஆடு கோழி
மட்டும் அங்கில்லை மகிழ்ச்சியும் அங்கில்லை/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan