கலங்கரை விளக்குகளே…

வசந்தா ஜெகதீசன்
கலங்கரை விளக்குகளே…
வாழ்வியல் நகர்வின் வரைமுறையில்
வடம்பிடித்தே நகரும் தலைமுறையில்
கற்றிடும் அனுபவப் பட்டறிவில்
தாயினம் பாசத்தின் பேரொளியே
தரணிக்கு முதலான கலங்கரையே

நோய் நொடி தீண்டிடும் வேளையிலும்
மருத்துவச் சேவையின் மகத்துவமே
மனிதநேயத்தின் மதிநுட்ப போற்றுதலே
உயிர்களை காத்திடும் கலங்கரையே

முடக்கத்தின் இடரிலும் அலைமோதும்
அவனிக்குள் எத்தனை பேரிடர்கள்
அன்றாடத் தொழிலாளர் வாழ்விடர்கள்
ஆதரிப்போர் கரங்கள் கலங்கரைகள்

ஆபத்து பற்றிப் படர்கையிலும்
அசுத்தத்தை அகற்றும் தொழிலாளர்
அவனியைக் காப்பதில் முதலானோர்
கலங்கரை விளக்கின் பேரொளிகள்

கடந்து பயணிக்கும் மானிடர் நாம்
அனுதினம் நன்றியை விதைப்பாக்கி
அவனியில் வாழ்வோம் கலங்கரையாய்.!:
நன்றி

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading