” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
நாடே என் நாடே

ஆத்தோரம் தூண்டிவிட்டு ஆனந்தமாய் மீன் பிடித்து
தோப்போரம் கூட்டாஞ்சோறு தோழியோடு உண்டதையும்

வயலிறங்கி நண்டுபிடிக்க வரப்பினிலே விழுந்தெழுந்து
முயலுகுட்டி புதருக்குள்ள மயில்முட்டை கையிலேந்தி

காட்டோரம் மரங்களிலே கனி வகைகள் பலவும் உண்டு
வீட்டோரம் முற்றத்திலே விளையாடி மகிழ்ந்தோமே

விவசாய தோட்டத்திலே விரட்டிய காககுருவி கவலை மறந்து
கதைகள் பேசி காணியிலே ஊர்வலமே

வெள்ளை சீருடையில்
வெள்ளி் நகைப்புடனே பள்ளி சென்றுநானும் பயின்றதை மறவேனோ

சொந்தநிலம் என்று
சொட்டும் உரிமையில்லை பந்தமென்ற உறவுமில்லை பகைமையின்றி
பாவியானோம்

நெஞ்சோடு நின்றாடும் நினைவினை இழப்பேனோ
தஞ்சம்தந்த தாயகமே தாய்நாடும் சுகமன்றோ

🙏🏻🙏🏻நன்றி வணக்கம்🙏🏻👏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan