” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

களவு

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025

அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்

ஆடம்பரத்திற்காய் உயிரை பறித்து
அவமானத்தில் நொந்து வெந்து
நிரந்தர துயரைப் பெற்று
நெஞ்சினிலே நிம்மதியற்று

உழைக்காமல் உயர நினைத்தால்
உதாசினம் உன்னை நாடும்
சிறு திருட்டாய் தொடங்கி
சிறைச்சாலை அள்ளிச் செல்லும்

களவை ஒளிப்போம்
கண்டனம் செய்வோம்
வியர்வை சிந்தி உழைத்து
விளக்காய் ஒளிர்ந்து நிற்போம்

Jeba Sri
Author: Jeba Sri