கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

கவிஞன் கவிதை

ஜெயம்
கற்பனை கொண்டு வார்த்தைகள் தீட்டி
சொற்களை அடுக்கி சுவையினை ஊட்டி
அற்புதமான கருத்தினை கருவுக்குள் கூட்டி
கற்றவை பெற்றவையை வரிகளுள் மாட்டி

தனிப்பட்ட அனுபவங்களின் ஈர்ப்புகளின் உத்வேகம்
துணிந்துமே சொல்லடுக்கி செய்திசொல்லி போகும்
தணிந்துவிடா இன்னுமின்னும் என்கின்ற தாகம்
கனிந்துவரும் சொற்பழங்கள் உருசையென ஆகும்

தெளிவாக உலகத்தை ஆழ்ந்தே உற்றுநோக்கி
மொழிகொண்டு விளையாடி படைப்பொன்றை ஆக்கி
துளித்துளியாய் செவிகளுக்குள் தேனதனை தேக்கி
சலிக்காமல் எழுதுவதால் ஆனந்தமே பாக்கி

சுற்றியுள்ள இயற்கையை அணுவணுவாக நேசித்து
இற்றைவரை கவிகளையும் காற்றாக்கி சுவாசித்து
பெற்றுக்கொண்ட ஆனந்தத்தை மறக்காமல் வாசித்து
இற்றைவரை வாழுக்கின்றேன் இறையாக்கி பூசித்து

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading