நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கவிஞன்

ஜெயம்

கவிஞன் என்பவன் வீரியம் கொண்டவன்
கவிதைகளை காதலிக்கும் வாழ்க்கையை கொண்டவன்
கருத்துக்களை எடுத்துக்காட்ட வேண்டியே உழைப்பவன்
திருத்தவென சமூகத்தை அறிவாலே உழைப்பவன்

எதையுமே குறிவைத்து வீசுவதில் கெட்டிக்காரன்
கதைப்பான் சுதந்திரமாக பாரதியாரின் பேரன்
கலைத்திறன்மிக்கவன் கவியனென்பது முற்றிலும் உண்மையே
கலைஞரில் அவனென்றும் புதுமையான தன்மையே

கற்பனை எனினும் பார்ப்பான் அழகாக
கற்றவற்றை கூர்தீட்டி பதிப்பான் வலுவாக
எழிலையும் வீணாக்காது கவிக்குள் வைப்பவன்
பழுதுகளையும் எழுதுகோலால் திருத்திடுவான் இவன்

Author: