கவிஞன்

ஜெயம்

கவிஞன் என்பவன் வீரியம் கொண்டவன்
கவிதைகளை காதலிக்கும் வாழ்க்கையை கொண்டவன்
கருத்துக்களை எடுத்துக்காட்ட வேண்டியே உழைப்பவன்
திருத்தவென சமூகத்தை அறிவாலே உழைப்பவன்

எதையுமே குறிவைத்து வீசுவதில் கெட்டிக்காரன்
கதைப்பான் சுதந்திரமாக பாரதியாரின் பேரன்
கலைத்திறன்மிக்கவன் கவியனென்பது முற்றிலும் உண்மையே
கலைஞரில் அவனென்றும் புதுமையான தன்மையே

கற்பனை எனினும் பார்ப்பான் அழகாக
கற்றவற்றை கூர்தீட்டி பதிப்பான் வலுவாக
எழிலையும் வீணாக்காது கவிக்குள் வைப்பவன்
பழுதுகளையும் எழுதுகோலால் திருத்திடுவான் இவன்

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading