கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

கவிதை நேரம்-09.05.2024 கவி இலக்கம்-1870 “அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே” ——–

கவிதை நேரம்-09.05.2024
கவி இலக்கம்-1870
“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே”
————————–
ஐயிரண்டு திங்கள் அவனியிலே என்னைச் சுமந்து
பகல் இரவு பாராமல் விழித்திருந்து
பட்டினியையும் ஒழுங்கே பறக்கவிட்டு
அவனியிலே உதிரத்தையே சிந்தியவள்
கருவிலே காத்து சுமந்தவள்
கண்ணென எண்ணி காத்து கிடந்தவள்
கைகளிலும் இடுப்பு தோள்களிலும்
சுமைகளான பொழுதுகளையும்
சுமமாக எண்ணி எனைக் காத்தவள்
இரத்தத்தை பாலாக்கினாள்
முத்தத்தை அன்பு பரிசாக்கினாள்
துன்பம் அகற்றி பொறுமைசாலியானாள்
மனதெல்லாம் மனக்கோட்டை எழுப்பினாள்
அகிலத்தை அறிய வைத்தவளே
அறிவுச் செல்வத்தை எனக்களித்திட்ட
தியாகச் சுடரல்லவா என் அன்னை
அன்னையின் அன்பிற்கு அகிலத்தில் நிகருண்டோ
வையகத்தில் உயரச் செய்து
அன்னையர் தின வாழ்த்தோடு வாழ்த்திடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading