” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கவி இல(126) வலியதோ முதுமை 28/03/24

இளமையில் இனிமை வெல்லும்
புதுமையில் முதுமை வெல்லும்
பொறுமையில் பெருமை வெல்லும்
வறுமையில் வலிமை வெல்லும்

உண்மையும் ஒழுக்கமும்
ஊக்கமும் ஆக்கமும்
திண்மையின் துணை கொண்டு
சுமை தாங்கிக் கற்களாய்

வேகமும் விவேகமுமாய்
பதட்டமும் பதற்றமுமின்றி
சுறு சுறப்புமாய்
காரியமாற்றும் திறனும்

மனதில் அழுத்தமில்லை
உற்றம் சுற்றம் பகையுமில்லை
பாசமும் நேசமுமாய்
ஒன்றாய் கூடி வாழ்ந்த காலமது

சுருக்கங்களின் எண்ணிக்கை
நமக்குக் கிடைத்த காணிக்கை
தள்ளாத வயதனிலும் இடித்த
வெற்றிலையை மென்றபடி
எம்மோடு வாழ்ந்த முதுமை
வலியதே வலியதே
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan