கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

“காலத்தின் சுழற்சியிலே”

நேவிஸ் பிலிப் கவி இல (612)

நிலையாமை நிலைத்த உலகினிலே
நிலையில்லா ஒன்றை
நித்தம் தேடி அலைந்து
நிம்மதி தொலைத்து வாழ்ந்து

காலத்தின் ஓட்டத்திலே
மாற்றம் தேடி எங்கெங்கோ ஓடி
ஆழ்கடல் படகென தடுமாறி
அங்குமிங்கும் அலைகின்றோம்

பொய்மை உலகினிலே
போலியாக வாழ்ந்து
ஆசைகளை வளர்த்து
ஆணவத்தில் அழிவைத் தேடுகின்றோம்

ஆன்மாவைத் தேடும் ஞானம்
மானுடத்தை தொலைக்காத விஞ்ஞானம்
அடுத்தவரின் வீழ்ச்சியிலே
மகிழாத மெஞ்ஞானம்

இவற்றின் சுழற்சியிலே
சுழலட்டும் உலகம்
இவற்றால் தொலையட்டும்
நிகழ்காலக் கலகம்
நன்றி,,,,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan