காலமே கவனி..

வசந்தா ஜெகதீசன்
காலமே கவனி…
மெளனத்தை மொழியாக்கி
மனிதத்தை விலையாக்கி
காலத்தை கருக்கிடும்
ஞாலத்தைக் கவனி!

பகிடியும் கிண்டலும்
பற்பல வலிகளும்
காலத்தை விரட்டிட
மனிதத்தை புதைத்திடும்
மாற்றத்தைக் கவனி!

சமூகத்தின் வலைத்தளம்
சங்கதி பலரகம்
நீதியின் நிர்ப்பந்தம்
நிறைந்திடும் நிகழ்வுகள்
தளரும் தன்னிலை கவனி!

எழுச்சியின் வீழ்ச்சியும்
ஏற்றத்தின் தோற்றமும்
மாயையாய் மாற்றிடும்
மனிதத்தைக் கவனி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading