கீதா பரமானந்தம்

மழைநீர்
கருமுகிலைக் கிழித்துக் காற்றினிலே பரவி
வருகின்றாய் மண்ணுக்கு வானக் கொடையாகி
மருவிநீ நின்றிட்டால் மண்மகளும் மலடாகி
உருகி வெடித்திட்டே உழன்று துடித்திடுவாள்!

மழைநீரே மண்ணின் உயிர்ப்பாய் நீதானே
தழைக்கின்ற பயிர்களின் தாகம் தீர்த்திடவே
உழைக்கின்ற மக்களின் உறுதுணைக் கரமாக
அழைக்கின்றோம் உன்றனையே அணைத்திடுவாய் காதலுடன்!

ஓர்மமுடன் வந்தே ஓடாதே வெள்ளமென
பாரதுவும் தாங்காது பதைபதைதே நிற்கிறதே
தார்மீகக் கடமையெனத் தந்திடவா மும்மாரி
வாரிப் பொழிந்திடவே வாஞ்சையாய்க் காத்திருப்போம்
தாரணியைக் காத்திட தஞ்சமே மழைநீரே!

கீத்தா பரமானந்தன்27-09-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading