கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

கீதா பரமானந்தம்

மழைநீர்
கருமுகிலைக் கிழித்துக் காற்றினிலே பரவி
வருகின்றாய் மண்ணுக்கு வானக் கொடையாகி
மருவிநீ நின்றிட்டால் மண்மகளும் மலடாகி
உருகி வெடித்திட்டே உழன்று துடித்திடுவாள்!

மழைநீரே மண்ணின் உயிர்ப்பாய் நீதானே
தழைக்கின்ற பயிர்களின் தாகம் தீர்த்திடவே
உழைக்கின்ற மக்களின் உறுதுணைக் கரமாக
அழைக்கின்றோம் உன்றனையே அணைத்திடுவாய் காதலுடன்!

ஓர்மமுடன் வந்தே ஓடாதே வெள்ளமென
பாரதுவும் தாங்காது பதைபதைதே நிற்கிறதே
தார்மீகக் கடமையெனத் தந்திடவா மும்மாரி
வாரிப் பொழிந்திடவே வாஞ்சையாய்க் காத்திருப்போம்
தாரணியைக் காத்திட தஞ்சமே மழைநீரே!

கீத்தா பரமானந்தன்27-09-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading