மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கீத்தா பரமானந்தன்

தைமகள்!
சந்தம்சிந்தும் சந்திப்பு!

தந்தானாத் தந்தானாப் பாட்டுப் பாடித்
தித்திப்பாய் வருகின்றாள் தை மகளாள்!
சிந்தையினை மெருகேற்றும் சுடர் ஒளியாய்
சிறப்புகளைத் தாங்கியுமே சீரோடு வருறாள்!

வித்தாரக் கனவுகளை விருப்ப்பாக்கும் விழைச்சலிலே
வீறுகொண்ட உழைப்பினையும் வேண்டியுமே நிற்கின்றாள்!
சொத்தாகி நல்லுறவைச் சொரிந்திடவே அழைக்கின்றாள்
சோதியென நம்பிக்கையின் சுடராகி மிளிர்கின்றாள்!

பற்றோடு சொல்கின்றேன் பகர்ந்தவைக்கு நன்றிகளை
பாரெங்கும் நிறைத்திடுவாய் பரவசத்தின் குளிர்ச்சியினை!
வற்றாத இன்பத்தின் வனப்பாக நின்வரவு
வையமெல்லாம் மகிழ்ந்திடவே வந்திடுவாய் புத்தாண்டாய்!

கீத்தாபரமானந்தன்
20-12-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading