பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

ஆறுமோ ஆவல்!
அசைபோடும். மனத்தில்
அலையாக ஆசைகள்/
விசையாக உந்துகின்ற
விதவித ஏக்கங்கள்!
கடைவிரித்து நிற்கின்ற
கணக்கற்ற எதிர்பார்புகள்!
முடையாகச் சுமக்கின்றோம்
முத்திரைகள் பதித்திடவே!

விடையறியா வினாவாய்
விரைகின்ற கணங்கள்
இடையினிலே ஆயிரமாய்
எழுந்திடும் எதிபார்ப்பு
தடையாகிப் போகாமல்
தக்கவைக்கப் போராட்டம்
மடையாகும் ஆவலொன்று
மனந்தனில் எப்போதும்!

எங்களது இல்லத்தில்
இளமையிலே வாழ்ந்ததுபோல்
சோதரர்கள் எல்லோரும்
சேர்ந்திருக்கும் காலமது
மீண்டொருநாள் வந்திடணும்
மான்களாகத் துள்ளிடணும்
ஆறுமோ ஆவல்?

கீத்தா பரமானந்தன்
05-06-23

ஆறுமோ ஆவல்

Nada Mohan
Author: Nada Mohan