நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

ஆறுமோ ஆவல்!
அசைபோடும். மனத்தில்
அலையாக ஆசைகள்/
விசையாக உந்துகின்ற
விதவித ஏக்கங்கள்!
கடைவிரித்து நிற்கின்ற
கணக்கற்ற எதிர்பார்புகள்!
முடையாகச் சுமக்கின்றோம்
முத்திரைகள் பதித்திடவே!

விடையறியா வினாவாய்
விரைகின்ற கணங்கள்
இடையினிலே ஆயிரமாய்
எழுந்திடும் எதிபார்ப்பு
தடையாகிப் போகாமல்
தக்கவைக்கப் போராட்டம்
மடையாகும் ஆவலொன்று
மனந்தனில் எப்போதும்!

எங்களது இல்லத்தில்
இளமையிலே வாழ்ந்ததுபோல்
சோதரர்கள் எல்லோரும்
சேர்ந்திருக்கும் காலமது
மீண்டொருநாள் வந்திடணும்
மான்களாகத் துள்ளிடணும்
ஆறுமோ ஆவல்?

கீத்தா பரமானந்தன்
05-06-23

ஆறுமோ ஆவல்

Nada Mohan
Author: Nada Mohan