மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கீத்தா பரமானந்தன்

நிச்சயதார்த்தம்

உனக்கென நானும்
எனக்கென நீயும்
ஒன்றாகும் சொந்தம்
உருவாக்கும் இன்பம்!
மூத்தோர்கள் கூடி
முடிவாகும் பந்தம்
முகவுரை காணும்
திருமணக் கோலம்!

இருமனங் கலந்து
இதயங்கள் பேசும்
இனிமைகள் சூடி
உறவென ஆக்கும்
தக்கோர் முன்னே
தட்டுக்கள் மாறும்
பக்கம் இரண்டும்
பரிமாறும் பலவும்!

மலர்களும் மஞ்சளும்
மங்கலம் இசைக்கும்
மனதினில் ஆயிரம்
கனவுகள் இனிக்கும்
வரைமுறை காணும்
வனப்புறு நாளாய்
வாழ்வினில் என்றும்
நிச்சயதார்த்தம்!

கீத்தா பரமானந்தன்06-02-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading