நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
நேரம்!

உலகினை இயக்கும் மந்திரமாம்
ஓயாது சுற்றுதே இயந்திரமாய்!
விலக்கிட முடியாப் பந்தமென
விலங்கெனத் தொடருதே நித்தமுமாய்!
கலங்கியே என்றும் நின்றதில்லைக்
காதலும் கருணையும் கொண்டதில்லை!
வரைமுறை வகுக்கும் பாடமென
வலையினைப் பின்னுது ஆயுளுக்கே!

ஞாலத்தின் மனிதப் பிறவிகட்கே
நயவுரை வரைவது நேரமதே!
சீலமாய்க் கண்டிடச் சிகரந்தொடும்
சீறிச் சினந்திட வீழ்த்திவிடும்!
மத்தியரேகைக் கோட்டினிலே
மலர்ந்து தவழ்ந்த மாயமெனக்
கட்டி இழுக்குது ககனத்தையே
கடந்திட முடியாப் பாலமிதாய்!

கீத்தாபரமானந்தன்
22-04-24

Nada Mohan
Author: Nada Mohan