” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

வசந்தம்!
புள்ளினங்கள் பாடப்
பூவினங்கள் கூட
தினமெல்லாம் களிப்பாக
திகழ்கின்ற. வண்ணம்
திசையெங்கும் பூக்களால்
நிறைகின்ற சின்னம்!
கனமெல்லாம் மறைந்திடக்
கனிந்திட்ட காலம்!
காற்றாகி. அணைக்கின்ற
வசந்தத்தின் கோலம்!

மொட்டையான தருக்களெல்லாம்
முகைவெடித்து நிற்கும்!
மோதிவரும் தென்றலதும்
மூச்சினையே முட்டும்!
வெட்டவெளி எங்கணுமே
விரித்திட்ட பாயாய்
வேளையின்றி அழைக்கிறதே
விருந்தெனவே பசுமை!

மெள்ளவுமே மாறியது
மேதினியின் கோலம்!
மெருகுடனே சிலிர்க்கிறது
வசந்தத்தில் ஞாலம்!
புள்ளினங்கள் பாடுகின்ற
பூபாளப் பாட்டு
புலர்கின்ற கணமெல்லாம்
பூரிப்பைச் சூட்டும்!

உள்ளமெலாம் இனிக்க்க்றதே
உதயமதைக் கண்டு
உற்சாகப் பொழுதாகி
உணர்வுகளை மீட்டும்
வெள்ளமென நிறைந்திருக்கும்
வீதியெல்லாம் பூக்கள்
வேளையின்றிப் பாடிடுவேன்
உற்சாகப் பாடல்!
துள்ளிடுதே இதயத்தில்
வசந்தத்தின் காதல்!

கீத்தா பரமானந்தன்
17-06-24

Nada Mohan
Author: Nada Mohan