” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பருவம்!
படைப்பின். விளையாட்டில்
பருவங்கள் பலவாய்!
தடையின்றி நகர்த்தும்
தடக்கியும் வீழ்த்திடக்
களிப்பினை நிறைப்பதும்
கணமெலாம் இனிப்பதும்
பச்சிளம் பருவம்!

கள்ளமேஇன்றிக்
கமழ்வுடன் மிளிரும்!
மல்லிக்கைப் புவாய்
மலர்ந்துமே சிரிக்கும்
சொல்லினில் அடங்காச்
சுந்தரப் பருவம்!

எண்ணிய முடித்து
ஏற்றத்தை நிறைத்து
மண்ணையும் கயிறாய்
மாற்றிடத் துடித்து
வண்ணமாம் உலகிற்கு
வழிகாட்டி நிற்கும்!
வாலிபப் பருவம்!

பருவத்தின் வாசல்
பயிற்றய பாடத்தில்
முற்றிய ஞானியாய்
மூப்பெனும் பருவம்!
சத்தமேயின்றி மூலையில்
சாய்க்கின்ற பருவம்!

கீத்தா பரமானந்தன்
02-09-24

Nada Mohan
Author: Nada Mohan