திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

விடியுமா தேசம்!
உருவமில்லா ஆசைகள்
ஓசையற்ற கனவுகள்
உள்ளமெனும் ஏட்டினிலே
ஓராயிரம் ஏக்காங்கள்
சொல்லிவிட வார்த்தையில்லை
சொந்தக்கதை சோகக்கதை!

முடிவற்ற இருளுக்குள்
மூச்சடைத்த இனமாக
விடிவெள்ளி காணாமல்
விரைகிறது ஆயுளுமே
பிடிச்சிராவி முதலைகளின்
பித்தலாட்ட அலைகளிடை
நித்தியமும் போராட்டம்
நிலைத்தெல்லாம் சேதாரம்!

ஆணவ அரசியல்
அகங்கார ஆதிக்கம்
சுரண்டியே வாழ்ந்திடும்
சுயநலக் கூட்டத்திடை
சிக்கிய மனிதம்
சிதைபடுதே தினந்தினம்!

நித்தியம் விலைபேசும்
நிரந்தர அரக்கரிடை
கடைச் சரக்காய்ச்
சுதந்திர வானம்!
விடிவெள்ளி தேடுகின்றார்
அப்பாவி மனிதர்!

கீத்தா பரமானந்தன்
23-09-24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading