” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

விடியுமா தேசம்!
உருவமில்லா ஆசைகள்
ஓசையற்ற கனவுகள்
உள்ளமெனும் ஏட்டினிலே
ஓராயிரம் ஏக்காங்கள்
சொல்லிவிட வார்த்தையில்லை
சொந்தக்கதை சோகக்கதை!

முடிவற்ற இருளுக்குள்
மூச்சடைத்த இனமாக
விடிவெள்ளி காணாமல்
விரைகிறது ஆயுளுமே
பிடிச்சிராவி முதலைகளின்
பித்தலாட்ட அலைகளிடை
நித்தியமும் போராட்டம்
நிலைத்தெல்லாம் சேதாரம்!

ஆணவ அரசியல்
அகங்கார ஆதிக்கம்
சுரண்டியே வாழ்ந்திடும்
சுயநலக் கூட்டத்திடை
சிக்கிய மனிதம்
சிதைபடுதே தினந்தினம்!

நித்தியம் விலைபேசும்
நிரந்தர அரக்கரிடை
கடைச் சரக்காய்ச்
சுதந்திர வானம்!
விடிவெள்ளி தேடுகின்றார்
அப்பாவி மனிதர்!

கீத்தா பரமானந்தன்
23-09-24

Nada Mohan
Author: Nada Mohan