” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்21-04-2023

ஆற்றல்! சந்தம் சிந்தும் சந்திப்பு

ஆற்றல் தானே அகிலத்தின் மூலம்
ஏற்றியே வைக்கும் எப்போதும் சிகரம்
ஊற்றென எழுந்தே உணர்வினை விரட்டி
உயரிய தடங்களை உவப்புடன் நிறுத்தும்!

சுந்தர உலகின் சுகந்தங்கள் யாவும்
தந்தவர் ஆற்றலைத் தமதெனக் கொண்டவர்
எந்திரம் படைத்தார் எழிலையும் சமைத்தார்
எடுத்திடு என்றுமே இன்பங்கள் சொரிந்தார்!

சிந்தையின் ஆற்றல் சிறகைனை விரிக்கச்
சிந்திடும் தேனாய்ச் சீரிய வழிகள்
மந்திரம் இதுவாய் மனத்தினிற் கொள்ள
மலர்ந்திடும் ஆயுள் மகத்துவம் சூட்டும்

தோற்றுவாய் நமக்குள் தொட்டுமே எழுவோம்
நாற்றெனப் பதிந்தே நயங்களை விதைப்போம்!
ஆற்றலின் வழியே ஆக்கியே கவியைச்
சாற்றியே நிற்பேன் சந்தத்தின் சிந்தில்!

கீத்தா பரமானந்தன்
21-04-2023

Nada Mohan
Author: Nada Mohan