கீத்தா பரமானந்தம்

யோசி!
சிந்தனைத் திறன் கொண்ட
சீரிய பிறவியாம் மனிதா
நிந்தனைக் குணமாய் நீயும்
மந்தையாய் வாழலாமோ?

யுத்தத்தின் சத்தத்தில்
குற்றுயிர் ஆகி
நித்தமாய்த் தொலைவது
மொத்தமாய் உயிர்கள் தானே
சற்றே நீ யோசி!

இனமத பேதங்கண்டு
இழந்தவை போதலையோ
வனவிலங்கின் கீழாய்
வரைமுறை இழக்கிறாயே
ஒருமுறை நீயும் யோசி!

பெண்ணவள் வயிற்றில் தோன்றி
பேயென மாறிப் பெண்ணைச்
சிதைக்கின்ற கணங்கள் தோறும்
கொஞ்சம் யோசி!
உண்மையில் நீ மனிதன் தானா?

கீத்தா பரமானந்தன்
23-01-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading