” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தம்

யோசி!
சிந்தனைத் திறன் கொண்ட
சீரிய பிறவியாம் மனிதா
நிந்தனைக் குணமாய் நீயும்
மந்தையாய் வாழலாமோ?

யுத்தத்தின் சத்தத்தில்
குற்றுயிர் ஆகி
நித்தமாய்த் தொலைவது
மொத்தமாய் உயிர்கள் தானே
சற்றே நீ யோசி!

இனமத பேதங்கண்டு
இழந்தவை போதலையோ
வனவிலங்கின் கீழாய்
வரைமுறை இழக்கிறாயே
ஒருமுறை நீயும் யோசி!

பெண்ணவள் வயிற்றில் தோன்றி
பேயென மாறிப் பெண்ணைச்
சிதைக்கின்ற கணங்கள் தோறும்
கொஞ்சம் யோசி!
உண்மையில் நீ மனிதன் தானா?

கீத்தா பரமானந்தன்
23-01-2023

Nada Mohan
Author: Nada Mohan