மறக்கதுதான் முடியுமா 769 09.07.2026

செல்வி நித்தியானந்தன் மறக்கதுதான் முடியுமா திட்டமிட்ட கொலைகள் திரண்ட தமிழினத்தை தீக்கிரை யாக்கியும் தீத்துக் கட்டியதே கத்திகோடரி துப்பாக்கி கனத்த ஆயுதங்களாய் கொலை...

Continue reading

“குதூகலம்”

சிவாஜினி சிறிதரன் சந்த கவிதை
இலக்கம்_198

“குதூகலம்”
உறவுகள் கூடி
உறவாடி மகிழ்ந்து
சுவைக்கு சுவை சேர்க்கும் உணவுகளும்
உறங்கும் நேரமும் குறைவாச்சு!

இளையவர் சிறுவர் கைகோத்து
குழுக்களாக
விளையாட்டு கூச்சலிட்ட சத்தமும்
விடிய விடிய கதையுமாம்!

புகுந்த வீட்டு அம்மாவும்
உடல்நலம் குன்றி இருந்திட்டார்
பேரன் போத்தி பூட்டன் பூட்டி
ஆடலுடன்
ஆனந்தம் கண்டு மகிழ்ந்திட்டார்!

விடியலை கண்டபின் நித்திரையாம் ஆடல்பாடல் ஆனந்தம் கண்ட விடுமுறை கொண்டாட்டம் இன்னும் இன்னும் எப்போது…?

நன்றி
16.08.25

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading