” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“குதூகலம்”

சிவாஜினி சிறிதரன் சந்த கவிதை
இலக்கம்_198

“குதூகலம்”
உறவுகள் கூடி
உறவாடி மகிழ்ந்து
சுவைக்கு சுவை சேர்க்கும் உணவுகளும்
உறங்கும் நேரமும் குறைவாச்சு!

இளையவர் சிறுவர் கைகோத்து
குழுக்களாக
விளையாட்டு கூச்சலிட்ட சத்தமும்
விடிய விடிய கதையுமாம்!

புகுந்த வீட்டு அம்மாவும்
உடல்நலம் குன்றி இருந்திட்டார்
பேரன் போத்தி பூட்டன் பூட்டி
ஆடலுடன்
ஆனந்தம் கண்டு மகிழ்ந்திட்டார்!

விடியலை கண்டபின் நித்திரையாம் ஆடல்பாடல் ஆனந்தம் கண்ட விடுமுறை கொண்டாட்டம் இன்னும் இன்னும் எப்போது…?

நன்றி
16.08.25

Nada Mohan
Author: Nada Mohan