நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

“குதூகலம்”

சிவாஜினி சிறிதரன் சந்த கவிதை
இலக்கம்_198

“குதூகலம்”
உறவுகள் கூடி
உறவாடி மகிழ்ந்து
சுவைக்கு சுவை சேர்க்கும் உணவுகளும்
உறங்கும் நேரமும் குறைவாச்சு!

இளையவர் சிறுவர் கைகோத்து
குழுக்களாக
விளையாட்டு கூச்சலிட்ட சத்தமும்
விடிய விடிய கதையுமாம்!

புகுந்த வீட்டு அம்மாவும்
உடல்நலம் குன்றி இருந்திட்டார்
பேரன் போத்தி பூட்டன் பூட்டி
ஆடலுடன்
ஆனந்தம் கண்டு மகிழ்ந்திட்டார்!

விடியலை கண்டபின் நித்திரையாம் ஆடல்பாடல் ஆனந்தம் கண்ட விடுமுறை கொண்டாட்டம் இன்னும் இன்னும் எப்போது…?

நன்றி
16.08.25

Nada Mohan
Author: Nada Mohan