” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

குமுழமுனை.

விண்ணவன் – குமுழமுனை.

ஒரு சுடர் அணைந்ததே…
*~***~*
கொடும் இருள்
விலக்கிடும் ஒளியாய்
செங்கனலென எழுந்ததுவே!‍‍‌!

பகை வென்றிடவே
துடித்ததுவே பகைவர்களை செந்தீயினிலே எரித்தே; அன்பர்கள்தனை
காத்திடவே ஒர்
சுடரென ஒளிர்ந்ததுவே;

விதி செய்த விளையாட்டிலே
நமக்கு அரணாய்
நின்ற அச் சுடரோ
அணைந்ததுவே அன்று;

அச்சுடர் அணைந்தாலுமே
அச்சுடர் தந்திட்ட – அவ்
ஒளிதனிலே கிடைத்திட்ட நினைவுகளோ
என்றும் எம் நெஞ்சங்களிலே
நீங்கா நினைவாய்
ஒளிருமே….
*~***~*
விண்ணவன் – குமுழமுனை…

Nada Mohan
Author: Nada Mohan