நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

குமுழமுனை.

விண்ணவன் – குமுழமுனை.

ஒரு சுடர் அணைந்ததே…
*~***~*
கொடும் இருள்
விலக்கிடும் ஒளியாய்
செங்கனலென எழுந்ததுவே!‍‍‌!

பகை வென்றிடவே
துடித்ததுவே பகைவர்களை செந்தீயினிலே எரித்தே; அன்பர்கள்தனை
காத்திடவே ஒர்
சுடரென ஒளிர்ந்ததுவே;

விதி செய்த விளையாட்டிலே
நமக்கு அரணாய்
நின்ற அச் சுடரோ
அணைந்ததுவே அன்று;

அச்சுடர் அணைந்தாலுமே
அச்சுடர் தந்திட்ட – அவ்
ஒளிதனிலே கிடைத்திட்ட நினைவுகளோ
என்றும் எம் நெஞ்சங்களிலே
நீங்கா நினைவாய்
ஒளிருமே….
*~***~*
விண்ணவன் – குமுழமுனை…

Nada Mohan
Author: Nada Mohan