குறைகளைக் குறைத்திட உயர்வு

குறைகளைக் குறைத்திட உயர்வு
சோம்பலை நீக்கிடு சுதந்திரம் பெற்றிடு
கூம்பிய பாதையில் கூடியும் நில்லாது
தேம்பியே நின்று திசையும் மாறாது
ஓங்கியே வாழவும் உன்னதம் கிடைக்குமே
குறைகளைக் குறைத்திடு உயர்வே வந்திடும்
அயராத பணியிலே ஆளுமையும் வேண்டுமே
வளையாத பாதைகள் எங்கும் இல்லையே
வளைந்தாலும் நிமிரும் வண்ணமே என்றுமே
இனிதான வரமும் இகத்திலே மலரட்டும்
புதுமை தந்திடப் பூமகள் வருகின்றாள்
பொங்கிடும் மனதிலே புனிதமும் நிலைத்திடவே
பொங்குவாய் கதிரவன் வரவே நீயும்
சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading