28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
குறைகளைக் குறைத்திட உயர்வு
சோம்பலை நீக்கிடு சுதந்திரம் பெற்றிடு
கூம்பிய பாதையில் கூடியும் நில்லாது
தேம்பியே நின்று திசையும் மாறாது
ஓங்கியே வாழவும் உன்னதம் கிடைக்குமே
குறைகளைக் குறைத்திடு உயர்வே வந்திடும்
அயராத பணியிலே ஆளுமையும் வேண்டுமே
வளையாத பாதைகள் எங்கும் இல்லையே
வளைந்தாலும் நிமிரும் வண்ணமே என்றுமே
இனிதான வரமும் இகத்திலே மலரட்டும்
புதுமை தந்திடப் பூமகள் வருகின்றாள்
பொங்கிடும் மனதிலே புனிதமும் நிலைத்திடவே
பொங்குவாய் கதிரவன் வரவே நீயும்
சர்வேஸ்வரி சிவரூபன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.