” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

குறை

ஜெயம்

குறைகளும் நிறைகளும் எவரிடமும் இருக்கும்
பறைதட்டியதை சொல்வதனால் நன்மையுண்டோ எவர்க்கும்
பிறர்மட்டில் தவறுகளை காணுகின்ற போக்கு
பிறவிக்குணமது மாறாததென்பது பெரியோரின் வாக்கு

பிறரை கடிந்துரைக்கும் பழக்கத்தை மாற்று
சிறப்பானவர்கள் யாரெவரென அதையுமொருமுறை காட்டு
வெள்ளைத்திரையில் கறுப்புப்புள்ளியை மட்டும் பார்க்காதே
தொல்லையே கொடுப்பதற்கென வாழ்க்கையை ஆக்காதே

தன்னை நல்லவனாய் காட்டவே விரும்பியே
இன்னொருவன் குறைபாட்டை பார்க்கலாமோ திரும்பியே
அவரவர் செய்வது அவரவரையே சாரும்
எவரெவருக்கு எதுவென கர்மாவே கூறும்

மற்றவர் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பு
குற்றங்களை மட்டும் கண்டுபிடிக்கும் பிழைப்பு
திருந்துவார் அவரெனில் திருந்திடுவார் தானாக
வருத்தாதே உன்வாழ்வை குறைகூறி வீணாக

Nada Mohan
Author: Nada Mohan